சென்னை, ஆக 24 -
தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கம், தமிழக முதல்வர் பதக்கம் வழங்கும் விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பதக்கங்களை வழங்கி பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்க ளுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் போது, குழந்தைகளை பராமரிப்பதில் பல சிர மங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் வைத்து வருகின்றனர்.
எனவே, அவர்களது கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறை முடிந்து பணி க்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்களது பணி மூப்புக்கு விலக்கு அளித்து, அவர்களு டைய பெற்றோர் அல்லது கணவன் வீட்டி னர் வசிக்கும் மாவட்டங்களில் பணி மாறு தல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.