tamilnadu

img

நீலகிரி : புலி குட்டிகளை மீட்ட வனத்துறையினர்

உதகை, நவ. 22 - நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வியாழனன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சீமர்குலி ஒடாய் பகுதியில் சென்றபோது பெண் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வனத்துறையினர் அங்கேயே காவல் இருந்து வந்தனர். அப்போது, அருகிலிருந்த புதரில் புலிகுட்டிகள் இருப்பதை கண்ட வனத் துறையினர், அதனை மீட்டு தெப்பக்காடு வனப் பகுதியில் விட்டனர். மேலும், தாய்புலி இறந்த தற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

;