tamilnadu

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (செப்.19) புதிய கல்விக் கொள்கை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (செப்.19) புதிய கல்விக் கொள்கை வரைவு நகலை திரும்பப் பெறக்கோரி கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் பேராசிரியர் செ.சுந்தரவள்ளி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட துணை நிர்வாகிகள் எம்.ரவிக்குமார், என்.ஜீவா, பி.கதிர்வேல், பி.கருணாமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் ப.லொகநாதன், சிஐடியூ நிர்வாகி குப்பன், அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெ.பாலச்சந்திரன் ஆகியோர் பேசினர்.தேவேந்திரன் நன்றி கூறினார்.