சென்னை, ஜூலை 1 - சென்னையில் கடந்த 3 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்து உள்ளது என்று மாநக ராட்சி ஆணையர் பிரகாஷ் தெரி வித்துள்ளார். சென்னை தண்டையார் பேட்டையில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தினசரி 500கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படு கின்றன. இதனால் 7 லட்சம் பேர் பயன டைந்துள்ளனர். ஜூன் 30வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தொற்று பரவுதல் குறைக்கப்பட்டு உள்ளது என்றார். கடந்த 3 ஆண்டுகளில் இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்து உள்ளதாக கூறினார். குறிப்பாக 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4859, மே மாதம் 5149 என இயற்கை இறப்பு இருந்தது. கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்த எண்ணிக்கை 4888, 5738 என இருந்தது. 2020ம் ஆண்டு இது ஏப்ரல் மாதத்தில் 3754 ஆகவும், மே மாதத்தில் 4532 ஆகவும் உள்ளது என்றும் அவர் கூறினார்.