tamilnadu

img

தேசிய மோட்டார் ரேஸிங் சாம்பியன் போட்டி

சென்னை,ஜூன் 13- இந்தியாவின் 8 அதிக நம்பிக்கையளிக்கும் பந்தய வீரர்கள் என்எஸ்எஃப் 250ஆர் கோப்பையின் அறி முகப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள்நிறு வனத்தின் தலைவர் மினோரு காட்டோ கூறியுள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய  அவர், அடுத்த தலைமுறை இளம் பந்தய வீரர்களை, 13 முதல் 17 வயதுக்குள் அடை யாளம் காண ஹோண்டா   இடெமிட்சு ஹோண்டா திறமை வேட்டையை  இந்த ஆண்டில் சென்னை, கோவை,உள்ளிட்ட  5 நகரங்களில் நடத்தவுள்ளது என்றார். இடெமிட்சு ஹோண்டா 6 பந்தய வீரர்களின் பெயர்களை அறிவித்து ள்ளது என்றும் புரோ - ஸ்டாக் 300சிசி பிரிவில் சரத் குமார், அனிஷ் ஷெட்டி, அபிஷேக் வாசுதேவ் ஆகியோரும் புரோ-ஸ்டாக் 165சிசி பிரிவில் பி.அரவிந்த், யஷாஸ் ஆர்.எல், கே.கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியாவின் அடுத்த மிகச்சிறந்த இருசக்கரவாகன மோட்டார் பந்தய வீரரை உருவாக்கி, உலக அளவில்  சிறப்பாக செயல்படுவதற்கு தேவை யான அனைத்து வசதிகளை யும் ஹோண்டா செய்து தரும் என்றும் அவர் கூறினார். பேட்டியின் போது  பிராண்ட் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு துணைத் தலைவ ரான பிரபு நாகராஜ் உடனிருந்தார்.