tamilnadu

img

கி. வீரமணிக்கு  ‘நரேந்திர தபோல்கர்’ நினைவு விருது...

சென்னை:
பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை இந்த ஆண்டு ஆசிரியர் கி.வீரமணிக்கு வழங்குவதாக மராட்டிய அறக்கட்டளை அறிவித்துள்ளது.

சங்பரிவாரால் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு  மராட்டிய அறக் கட்டளை விருது மறைவிற்குப் பின் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு விருது திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு வழங்க உள்ளதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதுப் பட்டயமும், ரூபாய் ஒரு லட்சம் பணமும் வழங்கப்பட உள்ளது.கடந்த காலங்களில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது, பஞ்சாப் மாநில தர்க்கசீல் சங்கம், கேரள மாநிலம் சாஸ்திரிய சாங்கித்ய பரிஷத் ஆகிய பகுத்தறிவாளர் அமைப்புகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.

;