நயினாரின் ரூ. 4 கோடி விவகாரம் பாஜக நிர்வாகியின் ஓட்டுநரிடம் விசாரணை
சென்னை, மே 11- தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 16 அன்று ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப் பட்டது. இந்த பணம், பாஜக நெல்லை வேட்பாளர் நயி னார் நாகேந்திர னுக்கு சொந்தமானது என்றும், வாக் காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப் படும் நிலையில், இந்த வழக்கை சிபி சிஐடி விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே, பாஜகவின் பொருளா தாரப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ள கோவர்த்தனன் வீடு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது கொரியன் ஹோட் டல் ஆகிய இடங்களில் சோதனை நடத் திய போலீசார், ரூ. 4 கோடி கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள நயினார் நாகேந்திர னுக்கு சொந்தமான ஹோட்டலிலிருந்தே கொண்டு செல்லப்பட்டது என்பதை விசாரணையில் கண்டறிந்தனர். கோவர்த்தனின் ஓட்டுநராக உள்ள விக்னேஷ் என்பவர் தான் பணத்தை கொண்டு வந்து கொடுத்ததாக விசா ரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் இந்த பண பரி மாற்றத்திற்கு முக்கியமானவராக செயல்பட்ட விக்னேஷிடம் மீண்டும் விசா ரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்ட மிட்டுள்ளனர். அதனடிப்படையில் விக் னேஷ் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கவும் முடிவு செய் துள்ளனர்.
ஜூலை 2 முதல் 8 வரை
எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு
சென்னை, மே 11- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 2 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அர சுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். ஜூலை 2 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், ஜூலை 3- ஆங்கிலம், ஜூலை 4- கணக்கு, ஜூலை 5 - அறிவியல், ஜூலை 6- விருப்ப மொழிப் பாடம், ஜூலை 8 - சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். துணைத்தேர்வை எழுதுவதற்கு மே 15 முதல் ஜூன் 1 வரையில் விண்ணப்பிக்க லாம். மேலும், விபரங்களையும், தேர் வுக்கால அட்டவணையையும் www. dge.tn.gov.in என்ற இணையத்தளத் தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சிப் பெறாத மற்றும் தேர்வையே எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்க முடியும்.
‘சவுக்கு’ சங்கர் பேட்டி விவகாரம்
நீதிமன்ற உத்தரவு பேரில் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது
சென்னை, மே 11- சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன் றம் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண் டும் என்ற அறிவுறுத்தலின்படி ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் நேர்கா ணல் அளித்த விவகாரத்தில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டை யும், தமிழக போலீசார் கைது செய்தனர்.
பெலிக்ஸ், தில்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை தில்லியிலேயே வைத்து வெள்ளியன்று இரவு 11.30 மணி அளவில் தமிழக போலீசார் கைது செய்த னர். பெண்களைப் பற்றி இழிவாக பேசிய தற்காக 2022-ஆம் ஆண்டு, பெலிக்ஸ் ஜெரால்டு மீது சைபர் கிரைம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை வெளியாகும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்!
சென்னை, மே 11- தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாண வர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு கள் மே 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளி யிடப்படும் என்று இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
தேர்வு தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 9.40 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவர்களும் இந்த இணைய தளத்தின் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் சம் பந்தப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ் சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு கல்லூரிகளில் 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்!
சென்னை, மே 11- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான பின்னணியில், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 20ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் விண் ணப்பங்கள் மேலும் அதிகரிக்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தக வல் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய்; பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!
சென்னை, மே 11- தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் கட்சி யின் பெயர் குறித்த அறிவிப்பு இன்றைய செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்கிற முனு சாமி, பொருளாளர் வெங்கடராமணன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலாளர் தாஹிரா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமாவை திரும்பப் பெற்றார் அனீஷ் சேகர்!
சென்னை, மே 11- ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர், எல்காட் நிறு வன மேலாண் இயக்குநராக இருந்தபோது கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து, மீண்டும் பணி வழங்கிய தமிழக அரசு, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் மேலாண் இயக்குநராக அனீஷ் சேகரை நியமித்துள்ளது.