tamilnadu

img

அதிக வரி செலுத்துகிற தமிழ்நாட்டுக்கு அநீதி

சென்னை, டிச.24- தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியாக ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்க வில்லை என்றும் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

சென்னை துறைமுக சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில், கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு 2100 கிறிஸ்துவ குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர், “நீங்கள்  என்னை கிறிஸ்துவன் என்று அழை த்தால் நான் கிறிஸ்துவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. இஸ்லாமி யன் என்று அழைத்தால் இஸ்லாமி யன். எனக்கு என்று எந்த ஒரு சாதியோ  மதேமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். இதைதான் எங்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் சொல்லி கொடுத்து இருக்கி றார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட அடுத்த டுத்த இரண்டு மழை வெள்ள பாதிப்பு களால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் இருந்து மீள்வதற்கு உடனே நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசி டம் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் ஒன்றிய அரசு வழக்கம் போல் மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஏமாற்றுகிறது. அதாவது நிதி ஒதுக்கீடு என்று வரும் போது, பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. 2015 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் போதெல்லாம் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் தான். அதாவது நாம் கேட்டதில் இருந்து வெறும் 4.6 சத வீதம் தான் ஒன்றிய அரசு நமக்கு கொடுத்துள்ளது.

தற்போது, சென்னை உள்ளிட்ட 4  மாவட்டங்களில் பெய்த அதி கனமழை  பாதிப்பை தொடர்ந்து தற்காலிக நிவா ரண நிதியாக 7 ஆயிரம் கோடி ரூபா யும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் கழக அரசு கேட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென் காசி மாவட்டங்களில் ஏற்பட்டப் பாதிப் புகளுக்கு அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரத மரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அர சிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வழக்கமாக பேரிடர் வந்தாலும் வரா விட்டாலும், ஆண்டுதோறும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்படுகிற இரண்டாம் தவணை 450 கோடி ரூபாய் கோடியை மட்டும் தான் ஒன்றிய அரசு விடுவித்தது.

குறிப்பாக, 2021-ல் குஜராத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. மறுநாளே அங்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, அம்மாநில அரசுக்கு ரூ.1000 கோடியை ஒன்றிய அரசு சார்பில் அறிவித்தார். மேலும், பிரதமர் நிவா ரண நிதியிலிருந்து உயிரிழந்த வர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், தமிழ்நாட்டின் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கேட்ட நிதியையும் வழங்க வில்லை. தமிழ்நாட்டின் பக்கம் அவர் எட்டிப்பார்க்கவும் இல்லை. தமிழ் நாட்டிற்கு இந்த எட்டு ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதி யிலிருந்து 6000 கோடி ரூபாயைத் தான் ஒன்றிய அரசு தந்திருக்கிறது.

ஆனால், பெரியளவில் பேரிடர் பாதிப்புகளை சந்திக்காத – மக்கள் தொகையில் தமிழ்நாட்டை விட குறைந்த எண்ணிக்கை கொண்ட குஜராத்துக்கு எஸ்டிஆர்எப் என்று சொல்லப்படுகிற மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. நவம்பர் மாத த்தில் மட்டும் 10 ஆயிரம் கோடியை ஜி.எஸ்.டி-யாக தமிழ்நாடு செலுத்தியி ருக்கிறது. நமக்கு இந்த ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து  மொத்தமே 900 கோடி மட்டுமே  கொடுக் கப்பட்டுள்ளது.

ஆனால், 3 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி கட்டிய மத்திய பிரதேசத்துக்கு 1000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு 5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி கொடுத்துள்ளது. ஆனால், நமக்கு திருப்பி கிடைத்தது வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், உத்தர பிரதேசம் செலுத்திய வரியே 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், அவர்க ளுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்ல, நேற்றுக் கூட மாநிலங்க ளுக்கு ஒன்றிய அரசு வரிப்பகிர்வு வழங்கியிருக்கிறது.‘ 

எவ்வளவு கொடுத்துள்ளார்கள்? உத்தரபிரதேசத்துக்கு 13 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 2 ஆயிரம் கோடி. இந்த பாரபட்சத்தை தான் நாம் கேள்வி கேட்கிறோம். அதிக வரி செலுத்துகிற தமிழ் நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை தாருங்கள் என்று தான் கேட்கிறோம். இதைக்கேட்டால், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்களுக்கு கோபம் வரு கிறது. தர முடியாது என்கிறார். பேரிடரே இல்லை என்கிறார் என தெரிவித்தார்.