tamilnadu

img

சட்டப்பேரவைக்கு அமைச்சர் தவறான தகவலை அளித்துள்ளார் மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு

சென்னை, டிச.11- கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்படாதது குறித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் தவறான தகவலை அளித்துள்ளதாக  அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தெரி வித்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை (டிச.11)  செய்தியாளர்களிடம் பேசிய   சட்டப் போராட்டக்குழு சங்கத்தின் தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது: கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்படாதது குறித்து தமிழக சட்டப்பேரசவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் முற்றிலும் தவறான தகவலை தெரி வித்துள்ளார். உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகா னந்தன் மனைவி அரசு வேலை கேட்டு, தன் குழந்தைகளுடன் சுகா தாரத்துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து முறையிட்டார்,

ஆனால், இதுவரைக்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால், வேறுவழி யின்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர். இந்த வழக்கில், திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை தர வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தர விட்ட பிறகும் நீதி கிடைக்க வில்லை.

இந்த நிலையில்தான், மறைந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்படாதது குறித்து டிச.10 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனி வாசன் கேள்வி எழுப்பினார். அப்போது, அமைச்சர்  மா. சுப்பிரமணியன், முற்றிலும் தவறான தகவலை பேரவையில் தெரிவித்தார். அதாவது மருத்துவர் விவே கானந்தனுக்கு 2 மனைவிகள் என்றும் குடும்பத்துக்குள் பிரச்சனை உள்ளது என்றும் சம்பந்தமே இல்லாத தவ றான தகவலை தெரி வித்துள்ளார்.

இது விவே கானந்தன் மனைவிக்கும் பெருத்த ஏமாற்றமாகவும், மிகப்பெரிய அதிர்ச்சியாக வும் உள்ளது. அதாவது, ஒரு வாரத்தில் அரசு வேலை தருவதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவர் விவே கானந்தன் உயிரிழந்து 4 வருடங்கள் கடந்த பிறகு அரசு வேலை வழங்க வில்லை.

இந்த நிலையில் மறைந்த மருத்துவரின் குடும்பம் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக’ உள்ளது. எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை அவரது கைகளால் வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் விவேகானந்தன் மனைவி திவ்யா, மகள் கீர்த்தனா, மகன் பிரிதிவ் ராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.