கைலாசபுரத்தில் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்படவுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள கைலாசபுரம் திட்டப்பகுதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செவ்வாயன்று (மே 13) ஆய்வு செய்தார். உடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன்., சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே எபினேசர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வரலாற்று தீர்ப்புக்கு வரவேற்பு...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், மாநில குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி, நிர்வாகிகள் அலமேலு, கே.கே.புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தோழர் நேபால் பட்டாச்சார்யாவுக்கு அஞ்சலி
அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் (AIRTWF) தலைவர் தோழர் நேபால் தேவ் பட்டாச்சார்யா மறைவையொட்டி சென்னை பெருநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் வி.குப்புசாமி, மோட்டார் வாகன சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் ஏ.ராயப்பன், டில்லி (எ) நாகராஜன், ஆர்.சந்தானம், சுந்தரம், ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.
திருவொற்றியூரில் கராத்தே பயிற்சி
டிஎஸ்கே சக்சஸ் ஸ்போர்ட்ஸ் ஷிடோ ரியோ கராத்தே மற்றும் சிலம்பம் அகாடமி சார்பில் கராத்தே பட்டை தேர்வு மற்றும் பயிற்சி முகாம் ஞாயிறன்று சென்னை திருவொற்றியூரில் நடைபெற்றது. முகாமில் சிறந்த முறையில் செயல்முறை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அகாடமி நிறுவனர் டி.சுதாகர், மரு.ராஜாகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பட்டை மற்றும் வெற்றி சான்றிதழ்கள் வழங்கினர்.