tamilnadu

img

விளையாட்டு வீராங்கனைக்கு செயற்கை கால் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

விளையாட்டு வீராங்கனைக்கு செயற்கை கால்   அமைச்சர் அன்பில் மகேஸ்  வழங்கினார்'

சென்னை, மே 14 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி வட்டம் ஒபுளாபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஏ.ராஜலட்சுமி அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி யாண்டு படித்து வருகிறார்.  கைப்பந்து, குண்டு எறிதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில், விபத்து ஒன்றில் அவர் தனது காலை இழந்தார். செயற்கை கால் கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்று துணை முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதனை யடுத்து துறை அலுவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி ஏ.ராஜலட்சு மிக்கு 1.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கைக் காலினை வழங்கினார்.