tamilnadu

img

மாநில அரசு அனுமதியின்றி சுரங்க ஏலம் கூடாது!

சென்னை, டிச. 9 - அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரி மத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரி மத்தையும் வழங்கக்கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டு நாள் கூட்டம் திங்களன்று (டிச.9) தொடங்கியது. கேள்வி நேரத்திற்கு பிறகு, டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி அவை முன்னவர் துரை முருகன் அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். 

தீர்மானத்தில் “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக் கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கி யக் கனிமங்களுக்கான உரிமங் களை மாநில அரசுகளின் அனுமதி யின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக் கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந் தது. இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

வரலாற்றுச் சின்னங்கள்

இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப் பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள் ளடக்கியதாகவும், அரியவகை  உயிரினங்களின் வாழ்வாதாரமாக வும் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கை களை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ள தை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

திட்டத்தைக் கைவிட வேண்டும்

இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தை யும் கருத்தில் கொண்டு, இப்பகுதி யையும், இப்பகுதியில் வாழும் மக்க ளையும் பாதுகாக்கும் பொருட்டு, ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தமிழ்நாடு முத லமைச்சர் பிரதமரை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.

உரிமம் வழங்குவது கூடாது!

இந்தச் சூழ்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக் கர்பட்டி கிராமத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரி மத்தை உடனடியாக ரத்து செய்திட வும், மாநில அரசுகளின் அனுமதி யின்றி எந்தச்சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, கொமதேக, த.வா.க. பாமக உள் ளிட்ட அனைத்துக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்த னர். 

அதிமுக - பாஜக உழப்பல்

சிறிய விவாதத்திற்குப் பின்னர், “நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்ததையடுத்து, அதிமுகவும் இத்தீர்மானத்தை ஆதரித்தது. பாஜக இந்த தீர்மா னத்திற்கு ஆதரவாகவோ, எதி ராகவோ நேரடியாக எதையும் தெரி விக்காததால், அவர்களும் ஆதரிப்ப தாகவே எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.


இதன்மூலம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்திற்கு எதிராக அவை முன்னவர் துரைமுரு கன் தாக்கல் செய்த அரசினர் தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவை யில் ஒருமனதாக நிறைவேறியது.

பாட்டாளி வர்க்க  நலன் காக்க வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர்கள் 
சீத்தாராம் யெச்சூரி - புத்ததேவ் மறைவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல்!

தமிழக சட்டமன்றக் கூட்டம் திங்களன்று காலை 9.30 மணியளவில் தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோரின் மறைவுக்கும் பேர வையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

பேரவைத் தலைவர் வாசித்த இரங்கல் குறிப்பில், “இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலை வரும், இந்திய அரசியலில் மூத்தத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி, 12.9.2024 அன்று கால மானார் என்ற செய்தியை அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற் றொணா துயரமும் கொள்கிறது. தோழர் சீத்தாராம் யெச்சூரி, பாட்டாளி வர்க்கத்தின் நலன் காப்பதில் மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவ கொள்கைகளை பரப்புவதிலும் தனது வாழ்நாளை அர்ப்பணித் தவர். இவர், மாநிலங்களவை உறுப் பினராக சிறப்பாக பணியாற்றினார்” என்று புகழாரம் சூட்டினார்.

அதேபோல புத்ததேவ் பட்டாச் சார்யா மறைவுக்கு வாசிக்கப்பட்ட இரங்கலில், “மேற்கு வங்க மாநி லத்தின் முன்னாள் முதலமைச்சர், இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா 8.8.2024 அன்று காலமானார். இந்த செய்தியை அறிந்து இந்த பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது. இவர், மேற்கு வங்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். சமத்துவ சமுதாயத்தை வளர்த்து எடுக்கவும் விளிம்பு நிலை மக்களின்  நலனுக்காவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ராணுவ முன்னாள் தலை மைத் தளபதி எஸ். பத்மநாபன், ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், தொழிலதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி. சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு  அனுப்பியதே மோடி அரசு தான்!சு. வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை, டிச. 9 - வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்காக அரிட்டா பட்டிக்கு அனுப்பி வைத்ததே மோடி  அரசு தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற மதுரை மக்களவை தொகுதி உறுப்பி னர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சு. வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அவைத் தலைவரின் இருக்கைக்கே  சென்று எதிர்ப்பு முழக்கமிட்டோம்

கனிமவளங்கள் திருத்தச் சட்டம்- 2023 (THE MINES AND MINERALS (DEVELOPMENT AND REGULATION) AMENDMENT BILL, 2023) மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு 28 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்களில் மக்களவை போர்க்களம் போல இருந்தது. 

iஇந்தச் சட்டம் தேசத்தின் கனிமவளங் களைப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கக் கொண்டுவரப்படுகின்ற சட்டம். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கின்ற சட்டம் இதனை ஏற்க முடியாது என அவையின் மையப்பகுதிக்கு மட்டுமல்ல அவைத்தலைவரின் இருக்கைக்கே சென்று முழக்கமிட்டு எங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

மிருகபலம் மூலம் வேதாந்தாவுக்கு சேவை செய்தது மோடி அரசு

எங்களின் கடும் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் தனக்கு இருந்த மிருகப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாங்கள் சொல்லுகிற எதையும் கேட்கா மல் சட்டத்தை நிறைவேற்றியது மோடி  அரசு. இந்தச் சட்டத்தின்படி வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை டங்க்ஸ்டன் கனிமத்தை எடுக்க அரிட்டா பட்டிக்கு அனுப்பிவைக்கும் திருப்பணியைச் செய்தது மோடி அரசு.

ஆனால் அரிட்டாபட்டியிலும், மேலூரி லும் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு வந்த வுடன் இன்று வேகவேகமாக பாஜக தலை வர் அண்ணாமலை, ஒன்றிய கனிம வளங்கள் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  அவர்களுக்குக் கடிதம் எழுதி அவர் முடிவைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார் எனவும் விவ சாயிகளின் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாட்டையும் பிரதமர் மோடி மேற் கொள்ள மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

அன்று நாடாளுமன்றம் அதிர்ந்ததை அண்ணாமலை அறியமாட்டார்...

அண்ணாமலை அவர்களே, இந்தச் சட்டம் மக்களவையில் நிறைவேறிய பொழுது அன்றைய தினம் மிகச்சிறிய எண்ணிக்கை யில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் களாகிய எங்களின் முழக்கத்தை காணொளியில் கேளுங்கள்.  “அதானிக் கான சட்டத்தைத் திரும்பப்பெறு” என்று அவை அதிர முழங்கினோம்.

ஆனால், அதானியின் நலனுக்கு எதிராக எதையும் செய்யாத பிரதமரால் இந்தச் சட்டம் விவாதம் ஏதுமின்றி நிறை வேற்றப்பட்டது. அன்று மக்களவையில் ஐம்பது பேரின் முழக்கம் இன்று அரிட்டா பட்டியில் பல்லாயிரம் பேரின் முழக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

‘கூட்டணி தர்ம’ கூண்டுப்பறவை  இன்று திடீரென கூவுகிறது...

அன்று மூர்க்கத்தனமாகச் சட்டம் கொண்டு வந்த நீங்கள் இன்று மக்கள் எதிர்ப்பைக் கண்டு வேகவேகமாகப் பின்வாங்கக் கடிதம் எழுதுகிறீர்கள். அன்று உங்களை ஆதரிப்பதை மட்டுமே  அரசியலாகக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி “இந்தச் சட்டம் நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என இந்தியா கூட்டணியைப் பார்த்து இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாகக் கேட்கிறார்.

எடப்பாடி அவர்களே இன்று நீங்கள் பேசியதை விட ஆயிரம் மடங்கு  ஆவேசத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மோடி ஆட்சியின் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாடளு மன்றத்தில் கூண்டுப் பறவையாக குறுகிக் கிடந்தீர்கள். சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்யும் உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை.

உங்களின் புதிய அவதாரம் கடந்தகால பாவங்களை இல்லாமல் செய்துவிடாது. காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் பிரதமர் மோடியின் விசுவாசத்திற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.