tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

50 அடியை  எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர், ஜூலை 18 - கர்நாடகத்தின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து சுமார் 75 ஆயிரம் கன அடி அளவிற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு வதால், மேட்டூர் அணைக் கான நீர்வரத்து வியாழ னன்று 23 ஆயிரத்து 989 கன அடி அளவிற்கு அதிகரித்துள் ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6.2 அடி அதிகரித்து 50.03 அடி யாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரு வதால், நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உருவாகிறது  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை, ஜூலை 18- தமிழகத்தில் கடந்த சில  நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இரு ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருக் கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொறுப்பு  தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவியேற்பு

சென்னை, ஜூலை 18- சென்னை உயர் நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண் டார். சென்னை உயர் நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் பதவியேற்கும் வரை, கிருஷ்ணகுமார் பொறுப்பு நீதிபதியாக பதவி வகிப்பார்.