கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமான காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுராந்தகம் பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மாதர் சங்கம் மதுராந்தகம் வட்ட தலைவர் வனிதா தலைமையில் நடைபெற்றது கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் மாதர் சங்க வட்ட செயலாளர் அனுசியா உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயந்தி உரையாற்றினார்.