கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கம்
கிருஷ்ணகிரி, ஜூன் 19 - கெலமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கம் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ஜெயராமன், நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா, இருதயராஜ், வட்டக் குழு உறுப்பினர் தூர்வாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பர்கூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கோரிக்கை பிரச்சார இயக்கம் இரண்டாம் நாளாக செயலாளர் சீனிவாசன் தலைமையில் 7 இடங்களில் நடைபெற்றது. கோரிக்கை விளக்க பிரசுரங்களை பெண்கள் வீடு வீடாக வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மூத்த தோழர் எல்லப்பன், வட்டக் குழு உறுப்பினர்கள் மல்லிகா, அன்வர், பாசில் பாஷா, முருகன், பரிதா, திருப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர். அஞ்செட்டி வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கம் செயலாளர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. நாட்ராம்பள்ளி, மாசாநெட்டி, கோட்டையூர் அஞ்செட்டி ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் குமாரவடிவேல், கிருஷ்ணன், கோவிந்தசாமி, சாந்தலிங்கம், தர்மலிங்கம், நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். போச்சம்பள்ளி வட்டக்குழுவின் மக்கள் கோரிக்கை பிரச்சாரம் செயலாளர் சாமு தலைமையில் அரசம்பட்டி, பாரூர், அகரம் பகுதிகளில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ், வட்ட குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, கடல் வேந்தன், அன்பரசு, கோவிந்தன் மற்றும் கந்தன் சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.