சென்னை, பிப்.13- தமிழ்நாடு மின்சார வாரியத்தை, மேலும் மேலும் பல கூறுகளாகப் பிரிக்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசால் 2003-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பொதுத்துறை நிறு வனங்களாக செயல்படும் மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் நோக்கோடு இச்சட் டம் கொண்டுவரப்பட்டது. அதில், இச்சட்டத்தின் பிரிவுகளை அமல் படுத்துவதை பொறுத்தே நீண்ட காலக்கடன் மற்றும் வட்டியில்லாக் கடன்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்பதையும் ஒன் றிய அரசு முன்நிபந்தனையாக்கியது.
இப்பின்னணியில் தமிழக அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம் என் பதை தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட் என்ற கம்பெனியாக மாற்றி அதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழ கம் (TANGEDCO) மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) என்ற இரு கம் பெனிகளை புதிதாக உருவாக்கியது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை இவ்வாறு 3 கம்பெனிகளாக பிரி வினை செய்தது மின்வாரியத்தை மேலும் பலவீனப்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கு போதுமான கவனம் செலுத்தாத நிலையிலும், மின்சா ரத்தை அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய தாலும் மின்சார வாரியத்திற்கான கடன் தொகை அதிகரித்துவிட்டது. தற்போது, மின்சார வாரியத்திற்கு ரூபாய் 1.67 லட்சம் கோடி வரை கடன் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசு மின்சார வாரியத்தை மேலும் மேலும் பிரித்து, தனியார் நிறு வனங்கள் ஆதாயம் அடையும் வகையில் செயல்படுத்த வலியு றுத்தி வருவது மிகுந்த கண்டனத் திற்கு உரியதாகும்.
தமிழ்நாடு அரசும், கடன் தொகையைச் சரிசெய்வது என்ற பெயரால் தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழ கத்தை (TANGEDCO) மூன்று கம் பெனிகளாக அதாவது, உற்பத்தி (அனல்), பசுமை மின்சாரம், மின் விநியோகம் என்ற முறையில் பிரி வினை செய்து அரசாணை 6 மற்றும் 7-ஐ வெளியிட்டுள்ளது. டான்ஜெட்கோ (TANGEDCO)-வின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் இந்த மூன்று கம்பெனிகளின் கீழ் கொண்டு வரத் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு பிரிவினை செய்வது, மின்சாரத்துறை மென்மேலும் தனியார்மயமாவதற்கும் தனியார் நிறுவனங்கள் மிகுந்த ஆதாயம் அடைவதற்கும் வழிவகுக்கும். இதோடு, மின் கட்டணம் உயர்வது என்ற நிலை உருவாகி பொதுமக் கள், சிறுதொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப் படும் நிலை உருவாகும். மேலும், இந்நடவடிக்கை தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நலன்களை பாதிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும்.
எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து இந்த அரசாணைகளை திரும்பப் பெறுமாறு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடு மாநிலக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.