சென்னை மார்ச் 22- 18-ஆவது மக்களவைத் தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும், திமுகவுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
40 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளோம். அந்த பணிகளை அதிகாரத்தின் மூலமாக அர சியலுக்கு வந்து செய்ய நினைத்தோம். அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி உதயமானது. லஞ்ச - ஊழல் இல் லாத அரசியலை உருவாக்கவே புதிய கட்சியை தொடங்கி பயணித்து வருகி றோம்.
எச்சரிக்கை மணி அவசியம்!
பாஜக பாசிசத்தை நோக்கியே பய ணித்துக் கொண்டிருக்கிறது. இந்த தேர்த லில் அந்த கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியது அவசியமாக மாறி யுள்ளது. எனவே தான், எனது சொந்த வாழ்க்கையைப் பற்றியும் கட்சியின் முன்னேற்றம், அரசியல் வளர்ச்சி குறித் தெல்லாம் யோசிக்காமல், மக்களவைத் தேர்தலின் முக்கியத்துவம் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் முடிவெ டுத்துள்ளேன். தேச நலனைப் பாது காப்பதற்கான போராகவே இந்த தேர்த லைப் பார்க்கிறேன். அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாலேயே இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எண்ணத்தில் திமுக கூட்டணியுடன் கை கோர்த்துள்ளோம். இதற்காக, தமிழ கத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம் என்று தோன்றியது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும். ஒன்றி யத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக தற்போ தைய சூழலில் இந்தியா கூட்டணியின் அடையாளமாக ராகுல் காந்தியே உள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.