tamilnadu

img

சுகாதார சீர்கேட்டில் மணலி புதுநகர்: அவதியில் மக்கள்

சென்னை, மே 21- ரசாயன கழிவுகள், டயர்கள், ரப்பர்கள் எரிப்ப தால் ஏற்படும் நச்சுக் காற்றால்  மணலி புதுநகர், அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்ள் மூச்சுத்திணற லுக்கு ஆளாகின்றனர். சென்னை மாநகராட்சி, 16வது வார்டுக்குட்பட்ட மணலி புதுநகரிலிருந்து, எலந்தனூர் சுடுகாடு நோக்கி செல்லும் சாலையின் இடது புறத்தில் தனி நபருக்கு சொந்தமான சுமார் 80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த  இடத்தில் கடந்த பல வருடங்க ளாக சுற்றுவட்டார தொழிற் சாலையிலிருந்து வரும் ரசா யன கழிவுகள், ரப்பர், டயர், வயர் போன்ற கழிவுகளைக் கொட்டி இரவு நேரங்களில் எரிக்கின்றனர். மேலும், பழைய சரக்குகள், இரும்பு காய்லான் கடை விற்பனை செய்யும் கடைக்காரர்களும், அந்த இடத்தில் கழிவுகளை தரம் பிரித்து கொளுத்தி வருகின்றனர்.

பொருட்களை எரிப்ப தால் எழும் நச்சு புகை 15, 16வது வார்டுக்குட்பட்ட மணலிபுதுநகர் மற்றும்  சுற்றுவட்டார பகுதி மக்க ளுக்கு மூச்சுத்திணறலை உருவாக்குகிறது. இதன்  காரணமாகவே அந்தப்பகுதி களில் பரவலாக புற்றுநோய், ஆஸ்துமா, தோல் ஒவ் வாமை போன்றவை ஏற்படு வதாகவும், கடந்த மூன்று வருடங்களில் மேற்கண்ட இரண்டு வார்டுகளில் சிறு வயதினர் முதல் பெரியவர்  கள் வரை புற்றுநோயால் அதிகம்பேர் இறந்துள்ளதா கம் அங்குள்ள மக்கள் தெரி விக்கின்றனர்.

காலி நிலத்தில் கழிவு களை எரிப்பதை தடுக்க வலி யுறுத்தி மாநகராட்சி அதி காரிகள் காவல்நிலையத்தில்  புகார் அளித்தும், உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இதனால் சமூக விரோத கும்பல்கள், தொழிற்சாலைகளிலிருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு, குப்பைகளைக் கொண்டு வந்து அங்கு கொட்டி தரம் பிரித்தல் மற்றும் எரித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் உயிருக்கு பாதகம் ஏற்படும் வகையி லும் செயல்பட்டு வரும் அத்த கைய சமூக விரோதிகள் மீது  மணலி புது நகர் குடி யிருப்போர் சங்கம் புகார் அளித்துள்ளது. இனியேனும் காவல்துறையும் மாநக ராட்சி நிர்வாகமும் நடவ டிக்கை எடுக்குமா?