tamilnadu

img

செங்கல்பட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - மனநலம் பாதித்த துணைவி

செங்கல்பட்டு அருகே இறந்தவர் உடல் 4 நாட்களாக வீட்டில் வைத்திருந்ததை கண்டறிந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னெரி ஊராட்சிக்குட்பட்ட பெரிய புத்தூர் கிராமம் உள்ளது. இங்கு நீஞ்சிலி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தாமோதரன் (62). இவர் ஜாதகம் கணிப்பது பஞ்சாங்கம் பார்ப்பது போன்ற தொழில் செய்து வந்துள்ளார். இவரது துணைவி சாரதா இறந்துவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக ராஜேஸ்வரி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

தாமோதரன் குறித்து அருகில் இருந்தவர்கள் விசாரித்தால், ஊருக்கு போயிருக்கிறார் என கூறிவந்துள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவரது வீட்டு பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அவரை மீண்டும் விசாரித்துள்ளனர். அவர் சமாளித்த நிலையிலும், அவரை தள்ளி விட்டு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு, அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்துள்ளது. அவரது உடல் ஈக்கள் மற்றும் புழுக்கள் இருந்துள்ளது. விரைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வந்தனர். ராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என அருகில் இருந்தார்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், அது தாமோதரன் உடல் என கூறியுள்ளனர். அவர் இயற்கை முறையில் இறந்தாரா, கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

;