tamilnadu

நாகர்கோவில் ,வேலூர் ,சென்னை முக்கிய செய்திகள்

பொய்கை அணையில் மூழ்கி மாணவர் மரணம்

நாகர்கோவில், ஜூலை 8- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சனியன்று ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணைக்கு குளிக்க சென்றார். அப்போது மாண வர் அபிஷேக் தண்ணீரில் மூழ்கி பலியானார்.  இந்நிலையில் மாணவர்களின் உறவினர்கள் சிவ கங்கையிலிருந்து ஞாயிறன்று ஆரல்வாய்மொழி வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய முறை யில் விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் மாணவர் இறந்த சம்பவம் குறித்து உடனடியாக அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை. மாணவர் அபிஷேக் இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவரது உடலைப் பார்க்கவும் காவல் காவல் நிலையத்திற்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலமானார்

சென்னை, ஜூலை 8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னோடிக ளில் ஒருவரான பால்வண்ண த்தின்  மனைவி காந்திமதி திங்களன்று (ஜூலை 8) கால மானார். அவருக்கு வயது 68. அன்னாரது உடல் எண்.21, வரதராஜபுரம் பிரதான சாலை, பள்ளிக்க ரணை, சென்னை  என்று முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று (ஜூலை 9) காலை 10 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இயற்கைப் பேரிடர்களை தாங்கி நிற்கும் பாறை

வேலூர், ஜூலை 7- வேலூர் மாவட்டம், மலையாம்பட்டு ஊராட்சியில் பெரிய மலையாம்பட்டு கிராமத்தில் இருந்து ஆர்மா மலை என்னும் அரும்பாவி மலைக்குச் செல்லும் வழியில் சுமார் 20 டன் எடை கொண்ட ஒத்தக்கல் பாறை உள்ளது. உயரமான பாறை மீது சாய்ந்த நிலையில் இந்த ஒத்தக் கல்பாறை அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டு களுக்கும் மேலாக இந்த பாறை சூறாவளிக் காற்று, நில அதிர்வு, தொடர் மழை என பல இயற்கை சீற்றங்கள் வந்தபோதும் இந்த பாறை நிலை குலையாமல், சிறிதும் நகராமல் சாய்ந்த நிலையில் நின்று கொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்ற னர்.  மேலும், வெயில் மற்றும் மழைக் காலங்களில் கால்நடைகள் மேய்ப்பவர்கள் இளைப்பாறும் இடமாகவும் இந்த பாறை உள்ளது. அதேபோல் இந்த பாறையை சுற்றி கல்குவாரி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்துள்ளது. இப்பகுதி மக்கள் கல்குவாரி நடத்தி வந்தவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பாறையை அப்படியே விட்டுவிட்டதாக கூறுகின்றனர்.