tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

காலி மனைகள் அனைத்திற்கும் வரி உண்டு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை,டிச.22- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காலிமனைகள் அனைத்தும் வரி விதிப்பிற்குட்படுத்தப்பட வேண்டும். வரி விதிப்பிற்கு உட்படாத காலி மனைகள் மீது உரிய சட்ட விதிக ளின்படி வரி விதிப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணை யாளர் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919ன் படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை க்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் மீது காலிமனை வரி விதிக்கப்பட வேண்டும். சென்னை மாநக ராட்சி மன்றத் தீர்மானம் எண். 405/2009, நாள்: 29.10. 2009ன்படி, சென்னை மாநக ராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகள் மீது, வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டு வரித் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. காலிமனைகள் மீதான வரி விதிப்புகள் அனைத்தும் நடைமுறையில் காலிமனை உரிமையாளர் அளிக்கப்ப டும் விண்ணப்பத்தின் அடிப்படையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் கள அலுவலர்களால் கள ஆய்வு மூலம் கண்டறிந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியால் காலிமனைகள் மீது வரி விதிப்புகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒரு சில பகுதிக ளில் உள்ள காலிமனை கள் வரி விதிப்பிற்குட்படு த்தப்படா மல் உள்ளது எனத் தெரியவந்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் மன்றத் தீர்மானம் எண். 405/2009, நாள்: 29.10.2009ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக ளில் உள்ள காலிமனைகள் அனைத்தும் வரி விதிப்பிற்குட்படுத்த வேண்டும் என்பதால், உரி மையாளர்கள் தங்களது காலிமனை மீது வரி விதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லை யெனில், உரிமை கோரும் ஆவணங்களை உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து, காலிமனை மீது வரி விதிக்க விண்ணப்பிக்க வேண்டும். வரி விதிப்பிற்கு உட்படாத காலிமனைகள் மீது உரிய சட்ட விதிகளின்படி வரி விதிப்புகள் மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களால் நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு 'திடீர்' அனுமதி மறுப்பு

சென்னை,டிச.22- சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு போலீ சார் ஞாயிறு மாலை அனு மதி மறுத்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிர மடைந்து வன்முறை சம்ப வங்களும்  நடைபெறு கின்றன.  அதனை தடுக்க பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்திலும் இதற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.  இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு போலீசார் ஞாயிறு மாலை அனுமதி மறுத்து வருகின்ற னர். திருத்தப்பட்ட குடியுரி மைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஞாயிறு மாலை 4 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கூடி நமது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று சமூக வலைதள நண்பர்கள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக தகவல் ஒன்று பரவி வந்தது.  இதையயடுத்து ஞாயிறு மதியம் 2  மணியளவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் வழிகள்   முழுக்கவே போலீ சாரின் கட்டுப்பாடிற்குள்  வந்தது. கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரம் போராட்ட க்காரர்கள் கடற்கரைக்கு அருகில் மாற்று இடத்தைத் தேர்வு செய்து, அங்கு கூடி கோஷங்களை எழுப்பியும், கையில் அட்டைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.