tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

அவசர காலத்தில் உதவுவோரை அங்கீகரிக்க விருதுகள்
சென்னை,ஜூலை 20- உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம் சமுதாயத்திற்கு பங்களித்த நல்மாந்தர்களை அலர்ட் பீயிங் விருதுக்கு பரிந்துரைக்கலாம். அல்லது  அவர்களே விண்ணப்பிக்கலாம்.  சென்னையில் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறும் அலர்ட் பீயிங் விருது கள் வழங்கும் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கவுரவிக்கப்படுவார்  கள். இந்த ஆண்டு அலர்ட் பீயிங் விருதுகள் “ முதலுதவி, சமூகநலம்,  சாலை பாதுகாப்பு, பொது சுகாதாரம், பணி நேரத்திலும் மக்கள் பாது காப்பை கவனத்தில் கொண்டவர்கள், சமூக நலன் சார்ந்த நிறுவனம்  அல்லது சமூக அமைப்பு” ஆகியவற்றின் கீழ் 13 சிறந்த நல்மாந்தர்க  ளுக்கு வழங்கப்படும். பரிந்துரைப்பதற்கான இணைப்பு: www.alert.ngo/aba பரிந்துரை களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2019 ஜூலை 21 ஆகும்.  அக்கறையின்மையும் அச்சமும் நிறைந்த உலகில், நல்ல மனிதர்களை  அடையாளம் கண்டு விருதுகளை வழங்குவதன் மூலம் ஒரு சாமானிய  மனிதனுக்கு அவசரகால நிகழ்வுகள் மற்றும் விபத்துகளின் போது உயிர்  களை காப்பாற்றுவதற்கான வலுவான நம்பிக்கையை அளிக்கும்.

பராமரிப்பு பணி: இன்று சென்னையில் மின்சார ரயில் சேவைகள் ரத்து
சென்னை, ஜூலை 20- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 21ம் தேதியன்று  சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 21ம் தேதி குறிப்  பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின் றன. சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரயில் சேவை  ரத்து செய்யப்படுகிறது. இதனால், காலை 7.50 மணி முதல் மதியம் 1.50  மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும். இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை  10.30 முதல் மதியம் 3.10 மணி வரைரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.