புதுச்சேரி, மே 20- புதுச்சேரியில் 58 நாட்க ளுக்குப் பிறகு உள்ளூர் பேருந்து சேவை தொடங் கப்பட்டுள்ளது. பொது மக்கள் முகக்கவசம் அணிந் தும், தனிமனித இடைவெளி யைக் கடைப்பிடித்தும் பேருந்தில் பயணம் செய்த னர். மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவுகளால் புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 31 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. இதனிடையே, 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. மாநி லத்துக்குள்ளேயே உள்ளூர் பேருந்துகளை இயக்குவது, கார், ஆட்டோக்கள் இயக் கம், கடைகள், உணவகங் கள் இரவு 7 மணி வரை திறந்திருக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வு கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழ கம் மூலம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளான கோரி மேடு, நல்லவாடு, கொம் பாக்கம், வில்லியனூர், டி.என்.பாளையம் என 5 வழித்தடங்களில் மட்டும் உள்ளூர் பேருந்து சேவை புதனன்று (மே 20) தொடங் கப்பட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். அதேபோல் பயணிகள் இருக்கையில் அமரும்போது தனிமனித இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப் பட்டுள்ளது.
பேருந்துகள் புறப்படுவ தற்கு முன்பும், பேருந்து வந்த பின்பும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அதே போல், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்குச் செல்லும் வழியில் தமிழகப் பகுதியான கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டி இருப்ப தால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்க ளிடம் புதுச்சேரி அரசு பேருந்து தமிழகத்தின் வழி யாக செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தார். இதனையடுத்து, புதுச் சேரியிலிருந்து கடலூர் மற்றும் நாகை மாவட்டம் வழியாக காரைக்காலுக்கு புதுச்சேரி பேருந்துகளை இயக்க இரு மாவட்ட ஆட்சி யர்கள் அனுமதி அளித்துள்ள னர். மேலும், புதுச்சேரி அரசுப் பேருந்துகள் தமிழகப் பகுதிகளில் நிறுத்திப் பய ணிகளை ஏற்றாமல் நேரடி யாக காரைக்காலுக்கு இயக்க வேண்டுமென நிபந்த னையுடன் அனுமதி வழங்கி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை (மே 21) முதல் புதுச் சேரியில் இருந்து காரைக்கா லுக்கு இடைநில்லாப் பேருந்து சேவை காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மதி யம் 12.30 மணிக்கு பேருந்து புறப்படும். ஊரங்கினால் 58 நாட்களாக நிறுத்தப்பட் டிருந்த பேருந்துகள் தற் போது இயங்கத் தொடங்கி யுள்ளது. ஆனாலும் தனி யார் பேருந்துகள் இயக்கப் படவில்லை.