tamilnadu

img

சாதியம் - பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்!

சென்னை, டிச. 24 - தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு தினம் செவ்வாயன்று (டிச.24) கடைபிடிக்கப்பட்டது. இதனை யொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:

தந்தை பெரியார் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும், பகுத்தறிவைப் பரப்பினார். அவரது சிந்தனைகள் மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு இன்றும் சவாலாக உள்ளது. சாதிய அணி சேர்க்கை; உணர்வுகளுக்கு முடிவு கட்ட வாழ்நாள் முழுவதும் போராடி னார். சமூக ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் பெரியார். தீண்டாமை, சாதி சமூக கொடுமை களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். குழந்தை திருமணத்தை அறவே எதிர்த்தார். பெண்ணடிமை தனத்திற்கு முடிவு கட்டும் கொள்கை களை உயர்த்திப் பிடித்தார்.

அத்தகைய பெரியார் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. ஆனாலும், இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தலித் மக்களுக்கு அனுதின மும் கொடுமைகள் நடக்கின்றன. சாதி உணர்வுகளும், சாதி அணி சேர்க்கை யும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில், தந்தை பெரியார் நினைவு நாளில், அவர் உயர்த்திப் பிடித்த  சமூக ஒற்றுமை, சாதியற்ற சமூகம், சமூக ஒடுக்குமுறை, பெண்ணடிமைத் தனத்தை முறியடிக்கும் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி உறுதியேற்கிறது. தமிழகமும் அந்த திசை வழியில் செல்ல வேண்டும் என்று அனைத்துப் பகுதி மக்களையும் அறை கூவி அழைக்கிறோம். பெரியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் அனை வரும், அவரின் கொள்கைகளை தமிழ கத்தில் அமல்படுத்த, செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.