tamilnadu

img

கடலூர் கருமாரப்பேட்டை தொடக்கப்பள்ளியில் கற்றல் அடைவுகள் திறனாய்வு நிகழ்ச்சி

கடலூர் கருமாரப்பேட்டை தொடக்கப்பள்ளியில் கற்றல் அடைவுகள் திறனாய்வு நிகழ்ச்சி

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருமாரப்பேட்டை மாநகராட்சி தொடக் கப்பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு  நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில், தொடக்கக் கல்வியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனை வருக்கும் வாசிப்பு மற்றும் கற்றல் அடைவுகள் திறனை மேம்படுத்துவதற் காக தமிழ் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை சவாலாக ஏற்று 100 நாட்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கற்றல் அடைவு திறன் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாணவர்களின் வாசிப்புத் திறனையும், கற்றல் திறனை யும் மேம்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சவால் விடுக் கப்பட்டது. இந்த சவாலை கருமாரப் பேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஏற்றுக்கொண்டது. அந்தப் பள்ளியில் 90 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களிடம் கற்றல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் சங்கீதா, வட்டார கல்வி அலுவலர்கள் இளஞ் செழியன், அன்புச்செல்வன், சங்கர், வடலூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் பழனி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விக்டர் ஜெயசீலன், கரு மாரப் பேட்டை தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஷமின் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை சரளமாக வாசித்துக் காட்டினார்கள். அனைவரும் மாணவர்களை பாராட்டினார்கள். கட லூர் கல்வி மாவட்டத்தில் 68 பள்ளி களில் வெள்ளிக்கிழமை வாசிப்பு திறன்  ஆய்வு நடைபெற்றதாக வட்டார கல்வி  அலுவலர் இளஞ்செழியன் தெரி வித்தார்.