tamilnadu

img

தரவுகளோடுதான் சட்டம் கொண்டு வர முடியும்! அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை, ஜூன் 24- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில், சாதி வாரிக் கணக்கெடுப்பு  தொடர்பாக பாமக உறுப்பினர் கோ.க. மணி எழுப்பிய கேள்வி களுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.  ரகுபதி பதில் அளிக்கையில், “கடந்த  அதிமுக ஆட்சியில்  10.5 சதவிகித உள்  ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

ஆனால்  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே அந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது. காரணம், சரியான தரவுகள் அடிப்படையில்- கல்வி,  வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, பொருளா தார பிரச்சனைகள்- இவற்றைப் பற்றிய சரியான தரவு களோடு கொண்டுவராமல் அவசர கதியில் மசோதாவை  நிறைவேற்றியதாகும். எனவே கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்ற தரவுகளோடு அது கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “இந்தப் பரிந்துரைகளை எல்லாம் ஆராய்ந்து  அறிக்கை அளிக்க நம்முடைய ஓய்வுபெற்ற நீதியரசர்  பாரதிதாசன்  தலைமையில் ஆணையம் அமைக்கப்பட் டுள்ளது. இந்த ஆணையம் விரைவான ஆய்வுகளைத் தர  வேண்டும் என்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வைகளுக்கான தரவுகளை இன்றைக்கு அரசாங்கம் திரட்டித் தந்திருக்கிறது. ஆனால், சமூகம், பொருளாதார மேம்பாடு போன்ற  தரவுகளை திரட்டித் தரப்பட வேண்டுமென்று சொன்னால்  அங்கே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்தாக வேண்  டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாக வேண்டும். இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய அரசிற்கு  சாதிவாரிக் கணக்கெடுப்பை 2001-க்குப் பிறகு நடத்தப்பட வில்லை. எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பை நீங்கள்  நடத்துங்கள் என்கின்ற கோரிக்கையை வைத்திருக்கின் றார்கள்” என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.