tamilnadu

குறைதீர்கூட்டம்

 சென்னை,செப். 16- சென்னை மாவட்டம். தென் சென்னை வருவாய் கோட்டம். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் அருகில். அண்ணாசாலை. கிண்டி. சென்னை – 32 என்ற முகவரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வரும் புதன்கிழமை ( செப். 18) பகல் 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.  இச்சிறப்பு குறைதீர் கூட்ட த்தில் கிண்டி, மயிலாப்பூர், ஆலந்தூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் வருவாய் துறை தொடர்புடைய மனு க்களை நேரடியாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,  இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.சீத்தாலட்சுமி தெரி வித்துள்ளார்