கொற்றவை சிற்பம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
கடலூர், ஜூன் 21 - பண்ருட்டி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப் பிடிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள அவியனுர் பகுதியில் கல்வெட்டு ஆய்வாளர்கள் களப்பணி மேற்கொண்டனர். அப்போது தனியார் வயல்வெளி பகுதியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட சதுர பலகை கல்லில் ஆகம விதிப்படி கொற்றவை சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகிஷன் எருமை தலை மீது நேராக நின்ற நிலையில் காட்சி அளிக்கும் படி அமைந்துள்ளது.
தலையில் மகுடமும், காதில் நீண்ட பட்டையான ஆபரணமும், எட்டு கரங்களில் சங்கு சக்கரம் நீண்ட வாள், அம்பு ,கேடயம் உள்ளிட்ட ஆயுதங்கள் முஸ்டி முத்திரை யில் பற்றியுள்ளாள். இக்கொற்றவை சிற்பம் அமைதி யான நிலையில் இருப்பதுடன் இது பல்லவர்கால கலைப் பாணியை கொண்டதாகவும். மேலும் தமிழக சிற்பக் கலைக்கு இது ஒரு புதிய வரவாக கிடைக்கப்பட் டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கள்ளசாராய வழக்கில் 23 பேர் கைது
கடலூர்,ஜூன் 21 - கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு எதிரொலி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 51 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடலூர் மாவட்ட முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி, உள்ளிட்ட 7 உட்கோட்டங்களில் சோதனை செய்து 204 லிட்டர் சாராயம் 500க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர்.
119 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சாராய விற்பனை மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில் கடத்தல் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தல் மது விற்பனை செய்பவர் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கடலூர், ஜூன் 21 - சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
புலியூர், கொக்கம்பாளையம் அருகே பாலகிருஷ்ணன் மற்றும் 6 நபர்கள் சட்ட விரோதமாக ஜேசிபி மூலம் 3 லாரிகளில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டனர்.
இவர்கள் மீது ஆலடி காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறவன்குப்பம் பாலகிருஷ்ணன் (வயது 30) கொக்கம்பாளையம் இளையராஜா (35), உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் இளையராஜா என்பவர்களின் கொடுங்குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் குற்றவாளிகளுக்கு ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தர விட்டுள்ளார்.
விஷச்சாராய பாதிப்பு: ஜிப்மரில் தீவிர சிகிச்சை
புதுச்சேரி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தியவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஜிப்மர் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19 அன்று விசச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிட மான நிலையில் உள்ளனர். 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு. உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலி சிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைத்து நோயாளி களுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
வேலூரில் ஜுன் 28 விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
வேலூர், ஜூன் 21 - வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெள்ளியன்று ஆட்சியர் வி.ஆர். சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த மாதத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர்.எனவே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதி சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.