சென்னை,டிச.25- வருகிற ஜனவரி 15 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கிளாம் பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம் பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு ஆகியோர் திங்களன்று (டிச.25) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இந்த பணிகள் முன்னேற்றம் குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டு அறிந்து வருகிறார்” என்றார்.
இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த பேருந்து நிலையம் திறக்கின்ற சூழ்நிலை இருந்தும், தள்ளி போனதற்கான காரணம் மழை காலங்களில், பெருமளவில் தண்ணீர் தேங்கி நின்றது. 1,200 மீட்டர் அளவுக்கு மழைநீர் வடிகால் அமைப்பு பணி நடந்தது. அந்த பணி தற்போது நிறை வேறியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையம் முழுமை யாக பயன்பாட்டுக்கு வரும்போது 2,310 பேருந்துகள் தினந்தோறும் அங்கிருந்து இயக்கப்படும். இதில் 840 ஆம்னி பேருந்துகளும் அடங்கும். இந்த பேருந்து நிலையத்தை ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன் படுத்த முடியும்.
இங்கு, பயணிகளுக்கு தேவை யான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகள் வாங்க பார்மசி, ஓட்டு நர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல் தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடை யற்ற மின்சார வசதி, பேருந்து நிலை யங்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையத்தை ஜன.1 அன்று முதலமைச்சர் திறந்து வைப்பார். புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் வகையில் திறப்பு விழா அமையும் என்றும் அவர் கூறினார்.
தமிழிசை ஆளுநர் பணியை பார்த்தால் போதும்
தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தித் தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர் எதிர்கால திட்டம், தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினராக போட்டியிடுவதுதான். ஏற்கெனவே தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்தனர். மீண்டும் தோல்வியைத் தான் கொடுப்பார்கள் என்றார்.