tamilnadu

img

சென்னையில் ஒரே இரவில் கிலோ கணக்கில் கஞ்சா, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் காவல்துறை நடவடிக்கை தீவிரம்

சென்னை, ஜூன் 9- போதை பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக சென்னையில் காவல்துறையினர் ஒரே இரவில் கிலோ கணக்கில் கஞ்சாவையும் லட்சக்கணக்கில் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருப வர்களையும், விற்பனை செய்ப வர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், நகரின் பல பகுதியில் காவல்துறையினர் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ள னர். இந்த நிலையில், ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலை மையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், ஓட்டேரி அடுத்த மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே சனிக்கிழமையன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில ளித்துள்ளார். பின்னர், சந்தே கத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், பெரு மளவு கஞ்சா மறைத்து வைத்தி ருந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஓட்டேரியைச் சேர்ந்த அருள் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர், அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 17 லட்சத்து 29 ஆயிரத்து ரூ.60 பணம் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல், அடை யாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தலை மையிலான குழுவினர் வேளச்சேரி ரயில் நிலையம் அருகே கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த நிசார் என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பேசின் பாலம் காவல் நிலைய ஆய்வாளர் தலை மையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில், புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஹஜ் கட்டிடம் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த உஷா என்ற பானுமதி மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மியா என்ற ஆனந்தவள்ளி, அவரது மகள் மோனிஷா மற்றும் வீரா என்ற வீரராகவன் மற்றும் முகமது நசீர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 90 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசா ரணையில், கைது செய்யப்பட்ட உஷா மீது 6 கஞ்சா வழக்குகளும், மியா மீது 9 கஞ்சா வழக்குகளும், வீரா என்ற வீரராகவன் மீது கஞ்சா மற்றும் அடிதடி உட்பட 11 வழக்குள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மாக கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மொத்தம் 3 வழக்கு கள் பதியப்பட்டதில், 3 பெண்கள் உட்பட 8 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 20.09 கிலோ கஞ்சா, ரூ.17 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.