tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் துணைத் தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்புத் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 11-ஆம் வகுப்பில் ஒரு படத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களைத் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 11-ஆம் வகுப்புத் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.