tamilnadu

img

கவரைப்பேட்டை ரயில் விபத்து விசாரணை

சென்னை, அக். 14 - கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக  ரயில்வே காவல்துறை சார்பில், 3  டிஎஸ்பி-கள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், கவரைப் பேட்டை ரயில் நிலையம் அருகே அக்டோபர் 11-ஆம் தேதி இரவு, நின்று  கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டி கள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்த னர். நல்வாய்ப்பாக எந்தவித உயிரி ழப்பும் ஏற்படவில்லை.

விபத்து நடந்த இடத்தில் தேசிய  புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தண்டவாளத்தில் ‘ஸ்விச் பாய்ண்ட்’ போல்ட்கள் சந்தேகத்திற்கு உரிய வகையில் கழன்று இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில், தடய வியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு  வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். அதுபோல, ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்தி வந்தனர். 

வழக்கு - விசாரணை 

கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், காயம் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், கவனக்குறைவான செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளிட்ட 4 பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்தனர். இதனடிப்படையில், ஒவ்வொரு வருக்கும் தனித்தனி சம்மன் கொடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பா ர்வையில், சென்ட்ரல் ரயில்வே காவல் டிஎஸ்பி கர்ணன், எழும்பூர் ரயில்வே காவல் டிஎஸ்பி ரமேஷ், சேலம் ரயில்வே காவல் டிஎஸ்பி பெரியசாமி ஆகிய தமிழக ரயில்வே காவல் டிஎஸ்பிகள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படை குழுவிலும் 8 பேர் உள்ளனர். 

இவர்கள் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், அங்கு கிடைத்த ஆதாரங்கள், அன்றைய நாளில் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். விபத்து தொடர்பாக ஏதாவது ஆதா ரங்கள் மற்றும் கருத்துகளை தெரி விக்கலாம் என்றும் ரயில்வே போலீ சார் தெரிவித்துள்ளனர்.