tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாள்: ஆக.7 அமைதிப் பேரணி

சென்னை, ஆக. 2- முன்னாள் முதலமைச்சர், திமுக முன் னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கால மானார். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது 6வது ஆண்டு  நினைவு தினம் வருகிற 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 7 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. காலை 7 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கலைஞர் நினை விடத்தில் முடிவடைகிறது. பேரணியில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண் டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பேரணி நிறைவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

ஜூலை மாத 
பருப்பு, எண்ணெய் பெற்றுக் கொள்ளலாம்

சென்னை, ஆக.2- ஜூலை மாதத்திற்கான துவ ரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“2024 ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாத வர்கள் வசதிக்காக 2024 ஜூலை மாதத்தில் நியாய விலைக் கடை களில் துவரம் பருப்பு மற்றும் பாமா யில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ள பட்டது. இருப்பினும் ஜூலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால், குடும்ப அட்டைதாரர்கள் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை. எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற் கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டை தாரர்கள், அவற்றை ஆகஸ்ட் (இம்மா தம்) மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  ஆஜராக உத்தரவு

சென்னை, ஆக.2- குட்கா வழக்கில் முன்னாள் அமைச் சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட 27 பேரும் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக தில்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள் ளது. 2020 இல் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கல்வராயன் மலை மக்களுக்கு வசதிகள்: ஆய்வறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம்

சென்னை, ஆக.2- கல்வராயன் மலைப் பகுதி மக்க ளுக்கு வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர்  பலியாகினர். இதையடுத்து  கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியான நிலையில், கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில், ஆய்வுகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசார ணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் வழக்கில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தாமாக முன் வந்து எதிர்  மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வனத்துறை சார்பில் தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.