tamilnadu

ஜூலை 24 தமிழ்நாடு முழுமையும் ஆர்ப்பாட்டம்

H சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துகிற குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெறு!
H ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் இடம்பெறச்செய்!
H தொழிலாளர் விரோத  தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும்  திரும்பப்பெறு!

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து மத்திய தொ ழிற்சங்கங்களின் கூட்டம் சென்னை  தொமுச அலுவலகத்தில் 11.07.2024 மாலை 04 மணிக்கு  எச்எம் எஸ் தேசிய தலைவர் க.அ.ராஜா ஸ்ரீதர்  தலைமையில் நடை பெற்றது. கூட்டத்்தில்   கி.நட ராஜன், வி.வேலுசாமி, பி.பன்னீர் செல்வம், எம்.சண்முகம், என்.தன சேகரன், (தொமுச),  ம. இராதாகிருஷ்ணன்,  பி.பீட்டர் (ஏஐடியுசி)  க.திருச்செல்வம்   (சிஐ டியு)  எம். சுப்பிரமணிய பிள்ளை,    (எச்எம்எஸ்) டி.வி.சேவியர், பி.அன் பழகன், பி.சுகுமாரன் (ஐஎன்டியுசி) வி.சிவக்குமார்,   (எஐயூடியூசி) உ. அதியமான்   (ஏஐசிசிடியு)    கே.ராம் பாபு (டபுள்யுபிடியுசி) எஸ்.மாயாண்டி (டியுசிசி),  இரா. அந்திரிதாஸ், (எம்எல்எப்) க.பேரறிவாளன் (எல்எல்எஃப்)  ஈ.சண்முகவேலு,  ஜி. முனுசாமி   (எல்டியுசி)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும்  முடிவு கள் எடுக்கப்பட்டன:

தமிழ்நாடு  வாக்காளர்களுக்கு நன்றி:

நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் விரோத,விவசாயிகள் விரோத, மக்கள் விரோத ஒன்றிய மோடி ஆட்சியை வீழ்த்த வாக்க ளித்து தமிழ்நாட்டில் 40 க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமை யிலான இந்தியா அணியை வெற்றி பெறச் செய்து, தமிழ் நாட்டில் சர்வா திகார சக்திகளுக்கு இடமில்லை  என்பதை உறுதி செய்த தமிழ் நாட்டின் வாக்காளர்களுக்கும், பாசிச மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்களின் இடை யறாத மோடி ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்ற, வெற்றி க்கு உழைத்த தோழர்கள் அனைவ ருக்கும் தமிழ்நாட்டின் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில்  நன்றி தெரிவிக்கிறோம்.  

வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு 

ஒன்றிய அரசின் மனிதாபி மானமற்ற, எதேச்சதிகார, குற்ற வியல் நீதி முறையை சீரழிக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற்ககோரி  போராடி வரும் வழக்கறிஞர்களின் போராட் டங்களுக்கு ஆதரவையும் ஒரு மைப்பாட்டையும் தெரிவிக்கி றோம்.   

ஜூலை 24  மாவட்டத் தலைநகர்களில்  ஆர்ப்பாட்டம் 

உழைக்கும் மக்களை மேலும் ஒடுக்குவதற்கு உரிய முறையில், மனிதர்கள் பயன்பாட்டில் இல்லாத சம்ஸ்கிருத மொழியில் பெயர் வைத்து ஒன்றிய  அரசு மூன்று குற்றவியல் சட்டங்களை நிறை வேற்றி, எதேச்சதிகாரமாக ஜுலை 1 முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப்பெற வேண்டும், விவ சாயிகளின் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்  என்று கோரி  தொடர்ந்து போராடி வருகிறோம். மோடி (3) அரசு அமைந்த பின்னர் முன் வைக்கப்பட உள்ள நிதி நிலை அறிக்கையில் தொழிலாளர்கள் நலனை முன்வைத்து இடம்பெற வேண்டியவை குறித்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அவை நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவேண்டும். எனவே, 

 ஒன்றிய மோடி அரசே!

1.மூன்று குற்றவியல் சட்டங்களையும் உடனடியாக திரும்பப்  பெறு!  

2,தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும்  திரும்பப்பெறு!  

3.ஒன்றிய அரசின் நிதிஅமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிதி நிலை அறிக்கையில் சேர்த்திடு!     

4.விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிடு!    

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜூலை 24 அன்று மாவட்ட தலைநகர்களிலும், தொழில் மையங்களிலும் ஆர்ப் பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  எனவே, மாவட் டங்களில் கூடி திட்டமிட்டு இப்போ ராட்டத்தை   சக்தி மிக்க போராட் டமாக நடத்த வேண்டும். மேலும் மாவட்ட கூட்டங்களில் முடிவு செய்து புதிய குற்றவியல் சட்டங்க ளின் அபாயம் குறித்து எளிமை யாக விளக்கக்கூடிய அறிஞர் ஒருவரை அழைத்து  ஆர்ப்பாட்டத் தின் போது விளக்க உரையாற்ற செய்திட வேண்டும். மேலும்  ஜூலை 24 க்கு முன்னதாக மாநில மையம் சார்பில் இணைய வழி விளக்க உரை ஏற்பாடு செய்யப்படும். 

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் 

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதில் உள்ள குறைபாடுகள், நிர்ணயித்த ஊதியத்தை மறுபரிசீலனை என்ற பெயரில் குறைத்து அறிவிக்கும் முறை குறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுக்கு கடிதம்  கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வுரிமை 

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பல ஆண்டு காலம் பணிபுரிந்து வந்த தொழிலாளர்க ளும் அவர்களது குடுமபமும் வாழ்வுரிமை இழந்து நிற்கும் நிலையில் வாழ்வுரிமையை பாது காக்க தக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு  கடிதம் கொடுப்பது என்று முடிவு செய்யப் பட்டது. 

ஜூலை 24  ஆர்ப்பாட்ட இயக் கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம்.