ஜெயலலிதா
இந்துத்துவாவாதிதான் டிடிவி தினகரன் வக்காலத்து
சென்னை, மே 30- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா வாதி என்று பாஜக தலை வர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார், ஆர்.பி. உதய குமார் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜெயலலிதாவின் தோழி சசி கலாவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஜெயலலிதா அனைத்து சமூகத்திற்கு மானவர் என்று கூறியிருந்தார். இந்நிலை யில், அண்ணாமலை கூறியது சரிதான், ஜெயலலிதா இந்துத்துவா வாதி தான் என்று பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வக்காலத்து வாங்கி யுள்ளார்.
“முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதா குறித்து பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை சொன்னதில் தவ றில்லை. ‘இந்துத்துவா’ என்பது வாழ்வி யல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறி யுள்ளது. எல்லா மதங்களையும் அரவ ணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984-ஆம் ஆண்டு ஜெய லலிதா எம்.பி.யாக இருந்தபோது காஷ்மீருக்கு 370-ஆவது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு பாகிஸ்தானிலா கட்ட முடியும்? இங்குதான் கட்டமுடியும் என பேசி ஆதரவாக இருந்தார்” என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
டிடிஎப் வாசனுக்கு நீதிமன்றம் ஜாமீன்
மதுரை, மே 30- பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன், கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆபத்தான முறையில் வாகனத்தை ஒட்டி யதாக அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரது ஓட்டுநர் உரிமமும் தமி ழக அரசால் ரத்து செய்யப்பட்டு இருந் தது. இந்த நிலையில் தற்போது உடல் நலம் தேறி உள்ள வாசன், கார் மூல மாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டே வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து மதுரை அண்ணா நகர் காவல் துறையினர், டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந் நிலையில் அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து
ரூ.25,000 அபராதம்
சென்னை, மே 30- 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத் தின் உரிமம் ரத்து செய் யப்படும் என்று போக்கு வரத்து விதிமுறை களை மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கும் வகை யில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறுவர் 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெறவும் தடை விதிக்கப்படும்.
அதேபோல், சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு அதிகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1,000 முதல் 2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூன் 1 முதல் அமலுக்கும் வரவுள்ளது. அதேபோல், ஓட்டுநர் உரி மம் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்வ தற்கு பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று தேர்வெழுதி உரி மம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒன் றிய அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம்
சென்னை, மே 30- அரசுப் பணி தேர்வில் தமிழ்த் தேர்வில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றால் மட் டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தனர். இந்த வழக்கில் தான், அர சாணையை உயர் நீதிமன்றம் உறுதி செய் துள்ளது. காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
18 இடங்களில் சதமடித்தது வெயில்
சென்னை, மே 30- தமிழ்நாட்டில் ஈரோடு, நாகை, கடலூர், திருத்தணி உள்ளிட்ட 18 இடங்க ளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. திருத்தணியில் இது வரை இல்லாத அளவில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர்.
தமிழகத்தில் 20 ஆயிரத்து 332 அரசுப் பள்ளிகளில் இணைய வசதி!
சென்னை, மே 30- தமிழ்நாட்டில் உள்ள 20 ஆயி ரத்து 332 அரசுப் பள்ளிகளுக்கு இணையதள வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் முடிவடைந்து விட்டதாக தமிழக அரசு வெளியிட்டி ருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணை யதள வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. 6 ஆயிரத்து 992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
24 ஆயிரத்து 338 துவக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 10 ஆயிரத்து 620 பள்ளிகளில் இணை யதள வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழகத்தில் மொத்த முள்ள 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகளில் 20 ஆயிரத்து 332 பள்ளி களில் இப்பணியானது முழுமை யாக முடிக்கப்பட்டுள்ளது. மீத முள்ள 17 ஆயிரத்து 221 அரசுப் பள்ளிகளிலும் ஜூன் இரண்டாம் வார இறுதிக்குள் இணைப்பு வழங்கப்படும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் “வரும் கல்வி யாண்டு முதல் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனு பவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள்” என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.