tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்டு மறியல்:ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது

சென்னை, ஜன. 30 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி செவ்வா யன்று (ஜன.30) மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ  - ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலவரை யின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம், உயர்கல்விக் குரிய ஊக்க ஊதிய உயர்வு, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணி யாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

சாலைப்பணி யாளர்களின் 41 மாத பணிநீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது.  சென்னை மாவட்டம் சார்பில் டிபிஐ வளாகத்தில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு. அன்பரசு, கு. வெங்கடேசன், அ. மாயவன் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.