சென்னை,மார்ச் 1 வீட்டு உபயோக சாதன ங்கள் தயாரிப்பில் முன்னணி யில் உள்ள உஷா இண்டர் நேஷனல் நிறுவனம் “உஷா ரேஸர்’’ என்ற பெயரில் அதி நவீன மின்விசிறியை அறி முகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் ஒட்டுநர் நரைன் கார்த்திகேயன் இதனை சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த மின்விசிறி அல்ட்ரா மிகவேகமாக செயல்பட்டு காற்று வழங்கும்.12 வடிவங்களில் இந்த மின்விசிறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உஷா இண்டர்நேஷனல் நிறுவன மின்சார விசிறிகள் மற்றும் பம்ப் பிரிவின் தலை வர் ரோஹித் மாதுர் கூறினார். இத்தகைய மின்விசிறிகள், 2 ஆண்டுகள் உத்தரவாதத்து டன், ரூ.1850 விலையில் கிடைக்கும்.