“பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதைச் சமாளிக்க அரசுத் தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பீகாருக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏன் பேரிடர் நிவாரண நிதி கிடைக்கவில்லை? இந்தியா ஒரு கூட்டாட்சி அரசு என்பதை நிதி அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள “அக்னிபாத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். நீட் தேர்வை தொடர விரும்பாத மாநிலங்களுக்கு அந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ ஆகிய அம்சங்களையும் நிதி அமைச்சர் நகலெடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசியுள்ளார்.