சென்னை:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு பத்தாயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 81 நாட்களுக்கு பிறகு 50 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது.மேட்டூர் அணைக்கு வியாழனன்று 9 ஆயிரத்து 900 கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளியன்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வெள்ளியன்று (ஆக.2) 50.15 அடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே சனிக்கிழமையன்று (ஆக.3) , ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட இருப்பதால், கூடுதலாக, வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.