கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கார் தீப்பற்றி எரிந்து நாசம்
கடலூர், ஜூன் 10 - வேப்பூர் கூட்டு ரோட்டில் கார் திடீரென தீப்பற்றி எரிந்து காரில் பயணம் செய்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பி னர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அடுத்த இறைஞ்சி கிராமத்தை சேர்ந்த வர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி மற்றும் கார் ஓட்டுநருடன் வேப்பூர் அருகே உள்ள காஞ்சி ரங்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள வேப்பூர் கூட்டு ரோடு வழி யாக சென்றார்.
வேப்பூர் கூட்டு ரோட்டில் காரை நிறுத்தி விட்டு கடையில் தங்க ளுக்கு தேவையான பொருட் களை வாங்க சென்றுள்ள னர். அப்பொழுது கார் திடீரென தீப்பற்றி கார் முழுவதும் தீ பரவி எரிந்துள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம்
வேலூர். ஜூன் 10 - வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்று வருகிறது
இம் முகாம்களின் மூலம் மாவட்டத்தில் உள்ள 604 தொடக்க பள்ளிகள், 175 நடுநிலைப்பள்ளிகள். 73 உயர்நிலைப்பள்ளிகள், 85 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 346 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1283 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள்ள 14 எல்காட் பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதை தொடங்கி வைக்கும் விதமாக கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி வழங்கினார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டுமானப் பணி துவக்கம்
விழுப்புரம், ஜூன்10- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே சின்ன செவலை ஊராட்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூட புதிய கட்டுமான பணி உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடை பெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்னசெவலை ஊராட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டுமான பணியை திங்களன்று நேரில் சென்று அடிக்கல் நாட்டி வைத்து, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
அப்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கு.ஓம் சிவசக்திவேல், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், உட்பட பலர் உடனிருந்தனர்.
பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கடலூர், ஜூன் 10 - கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான திங்களன்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், முதன்மை கல்வி அலுவலர் பழனி, சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். முன்னதாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வானப்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் 5 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி திங்களன்று (ஜூன்10) தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்புகள், கால்நடை பசுந்தீவன உற்பத்தி விதைகள் ஆகியவைகளையும் கால்நடை விவசாயிகளுக்கு வழங்கினார்.