கேரளா மாநிலத்தை சேர்ந்த முதுகலை மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தற்கொலை சென்னை ஐஐடி மீதான நம்பிக்கையை மேலும் தகர்த்து விட்டது. ஒரு குறிப்பிட்ட பேராசிரியரும் சில மாணவர்களும் தம்மிடம் மதரீதியில் பாகு பாட்டுடன் நடந்துகொண்டதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தாம் தற் கொலை செய்துகொண்டதாகவும் அம்மாணவி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பிற்போக்கு கருத்துக்கள் அதிகமாக நிலவும் நமது நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ள போதிலும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடு மைகள், சீண்டல்கள், பாலின ரீதியிலான பாகுபாடு கள் கல்வி கற்பதற்கு பெரும் சவாலாக உள்ளன. சென்னை ஐஐடியில் கேரள மாணவிக்கு ஏற்பட்டுள்ள துயரமான நிலைகுறித்து தமிழக மக்கள் வேதனைப்படுகிறார்கள். இஸ் லாமிய மக்களுக்கு எதிராக வடஇந்தியாவில் கருத்தியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமை யான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. கும்பல் தாக்குதலுக்கு பயந்தே இந்த பெண்ணை அவரது பெற்றோர் முதலில் உயர் கல்வி கற்க இடம் கிடைத்த பனாரஸ் நகருக்கு அனுப்ப மறுத்தனர். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று கருதியதால் தான் சென்னையில் படிக்க அனுமதித்ததாக மாணவி ஃபாத்திமாவின் பெற் றோர் கூறியுள்ளனர். ஆனால் சென்னையும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துவிட்டதால் தமிழக மக்கள் வெட்கித் தலை குனியும் கதி ஏற்பட்டுவிட்டது. அந்த மாணவியை அடிக்கடி சிறுமைப் படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்ப்பலி க்கு ஆளாக்கிய பேராசிரியர்கள் மற்றும் மாண வர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்ற வாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனம் என்பதால் இந்த விஷயத்தை மூடி மறைக்க சில சக்திகள் முய லக்கூடும். அதற்கு மாநில அரசும் காவல்துறையும் இடம் கொடுக்கக்கூடாது. பெண் குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கும் மர்ம மரணங்களுக்கும் உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், கேரள மாணவி யின் சோகமயமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது. சென்னை ஐஐடியில் கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். எனவே கேரள மாணவியின் மரணம் குறித்து நேர்மையான வெளிப்படையான விசார ணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். கல்விநிலையங்களில் மாணவர்களின் ஜனநாயகப்பூர்வமான செயல்பாடுகளை அனு மதிக்கும் போது இதுபோன்ற நிகழ்வுகளை ஆரம்பத்திலேயே களைய முடியும். மாண வர்கள்- ஆசிரியர்கள் இடையே ஆரோக்கிய மான உறவு ஏற்படவும் அது உதவும்.