tamilnadu

img

கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் வரை சிறை, ரூ.10 லட்சம் அபராதம்

சென்னை, ஜூன் 29- கள்ளச் சாராயத்தை முற்றிலு மாக ஒழிக்கும் நோக்கில், அதற்  கான தண்டனைகளை கடுமையாக்க  வகைசெய்யும் மதுவிலக்கு சட்டத்  திருத்த மசோதா சட்டப் பேரவை யில் நிறைவேறியது. கள்ளச்சாராயத்தை முற்றிலு மாக ஒழிக்கும் வகையில், அதை தயா ரிப்பவர்கள்- விற்பனை செய்பவர்  களுக்கு ஆயுள் வரை கடுங்காவல்  தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய்  வரை அபராதத் தொகையை உயர்த்தி கடுமையான தண்டனை களையும் விதிப்பதற்கான சட்டத்  திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை கொண்டு வரப் பட்டது.

இந்த சட்ட முன்வடிவை அமைச்சர் எஸ். முத்துசாமி அறி முகம் செய்தார். தற்போதுள்ள 1937-ஆம் ஆண்டு  தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்  வது, அருந்துதல் போன்ற குற்றங்க ளுக்கு தண்டனைகள் வழங்கப்படு கிறது. இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்  சாராயத்தை தயாரித்தல், உடைமை யில் வைத்திருத்தல், விற்பனை செய்  வது போன்று வழக்கமாக நடை பெறும் குற்றங்களுக்கு வழங்கப் படக் கூடிய தண்டனைகள் போது மானதாக இல்லை என்று கருதியே இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவ தாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து  கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை  முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. கள்ளச்சாரா யத்துடன் கலக்கப்படக்கூடிய குடி  தன்மை இழந்த எரிசாராயம், மெத்த னால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்  கத் தண்டனையை அதிகரிப்பது அவ சியம் என்றும் அரசு கருதுகிறது. இதற்காக கொண்டுவரப்பட் டுள்ள சட்டத் திருத்தத்தில் சிறைத்  தண்டனையின் கால அளவும், அப ராதத் தொகையினுடைய அளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதி மயக்கக்கூடிய மருந்தினை தயா ரிப்பது, கொண்டு செல்வது, வைத்தி ருப்பது மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மர ணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை  கடுங்காவல் சிறைத் தண்டனை யோடு பத்து லட்ச ரூபாய் வரைக்கும்  அபராதத் தண்டனை விதிக்க திருத்  தம் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல குற்றங்களில் பயன்  படுத்தக்கூடிய அனைத்து அசை யும் சொத்துக்களையும் பறிமுதல்  செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத  இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற  குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்  பதற்கு கணிசமான தொகைக்கு பிணை முறிவினை நிறைவேற்றுவ தற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்  யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மது விலக்கு அதிகாரி அல்லது புல னாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில்  விண்ணப்பம் செய்வதற்கும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்  கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், இடம் என அனைத்தை யும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளும், அபராத தொகை களையும் அதிகரித்து மற்றும் அதி காரிகளுக்கு அதிகாரம் வழங்கு வதற்கான வழிவகை செய்த சட்டத் திருத்தத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார். இதன் மீது உறுப்பினர்கள் விவா தங்களை வைத்தனர்.

அப்போது சட்டத்திற்குள் மதுவிலக்கு ஆயத்  தீர்வை காவல்துறை அதிகாரிகளை யும் கொண்டு வந்து பொறுப்பாக்க வேண்டும். தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஎம் உறுப்பினர்  நாகை மாலி உள்ளிட்ட எம்எல்ஏக்கள்  வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கள்ளச்சாராய பலிக்கு காவல்துறை அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர்

முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில், காவல், தீயணைப்பு மற்றும்  மீட்புப் பணிகள் துறைகள் தொடர்  பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பதில ளித்து முதலமைச்சர் பேசினார்.

அப்போது, “விஷச்சாராய விற்  பனை என்பது ஒரு சமூகக் குற்றம்.  விலை மதிப்பில்லாத மனித உயிர்  களை பலி வாங்குகிற இதை முற்றி லுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்  துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர்ப் பலி நடக்கு மானால், அதற்கு அந்த மாவட் டக் காவல்துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய  அதிகாரியும் தான் பொறுப்பேற்க  வேண்டும் என்பதை அதிகாரி களுக்கு மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கள்ளச் சாராயத்தை  போலவே போதை மருந்து ஒழிப்பி லும் காவல் துறை அதிகாரிகள் உறு தியாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகி றேன். மது, போதைப் பழக்கங்க ளுக்கு எதிராக குற்றத் தடுப்பு நட வடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்  அதிகம் முன்னெடுக்கப்பட வேண்  டும் என்று அரசு கருதுகிறது. போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி  பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்  றும் கேட்டுக் கொண்டார்.

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் ஜூன் 20-ஆம் தேதி  தொடங்கியது. மானியக் கோரிக்கை மீதான கொள்கை  விளக்கக் குறிப்புகளைத் தாக் கல் செய்து அமைச்சர்கள் துறை வாரியாகப் பேசினர். அதைத்  தொடர்ந்து உறுப்பினர்கள் விவா தம் தினமும் காலை, மாலை என  இரு வேளைகளிலும் நடைபெற் றது. அதைத் தொடர்ந்து, மானி யக் கோரிக்கைகள் நிறைவேற் றப்பட்டன. மேலும் மதுவிலக்கு திருத்தத் சட்டம், புதிதாக 4 நக ராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது உள்ளிட்ட  மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. இந்நிலையில், மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டத் தொடரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஒத்தி வைத்தார்.