வேலூர், மார்ச் 26 - வேலூர் தொகுதியில், இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் பெயரில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், நாட்டு மருந்து விற் பனை கடைக்கு சென்று ஒலி பெருக்கியின் மூலம் நாட்டு மருந்துகளின் பெயர்களை கூறி விற்பனை செய்து பிரச் சாரத்தில் ஈடுபட்டார். அப் போது, “வேலூர் மாவட்டத் தில் மலைகள் அதிகமாக இருப்பதால் கொடைக்கான லில் இருப்பது போல் மரங் களை கொண்டு வந்து நட்டு மலைகளை பசுமையாக்கு வேன்; பத்தாம் வகுப்பு பொது தேர்வை குளிர்காலத் திற்கு மாற்றுவேன்” என் றெல்லாம் வாக்குறுதிகளை அளித்தார்.