தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேள்வி
சென்னை, மே 15 - தமிழக அரசு அமைத்துள்ள பள்ளி கல்வித் துறைக்கான நிபுணர் குழுவில் கல்வியா ளர்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி, பள்ளிகல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைய னுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு அரசு அமைத்திருக்கும் நிபு ணர்கள் குழுவை கண்டு அதிர்ச்சி அடைகி றோம். பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரி கள் கொண்ட குழுவை, எப்படி நிபுணர்கள் குழு என்று ஏற்பது?
தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் தயாரிக்க ஓர் உயர் மட்டக் குழுவை உருவாக்கிய போது, பேரா. மு. அனந்தகிருஷ்ணன் தலை மையில் பல கல்வியாளர்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அதேபோன்று நாட றிந்த கல்வியாளர்களைக் கொண்டு, நிபு ணர்கள் குழுவை அமைக்க வேண்டும். முற்றிலும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரி களைக் கொண்டு ஒரு குழுவை உருவாக்கி விட்டு இது நிபுணர்கள் குழு எனில் அது ஏற்கத் தக்கது அல்ல. கல்வியாளர்கள், மாண வர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் பொறுப்பா ளர்களையும் இணைத்து நிபுணர்கள் குழுவை விரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிததில் கூறப்பட்டுள் ளது. இது தொடர்பான மனு முதலமைச்ச ருக்கு, துறையின் செயலாளருக்கும் அனுப் பப்பட்டுள்ளது.