32,000 பணியாளர்கள் இருந்த இடத்தில், தற்போது 750 பேர் மட்டுமே உள்ள ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (எச்எம்டி) நிறுவனம் அதன் மறுசீரமைப்புக்கான திட்டங்களை வழங்க அகில இந்திய ஆலோசனை நிறுவனத்திடம் இருந்து டெண்டர்களை அழைத்துள்ளது.
எச்எம்டி மெஷின் டூல்ஸ் மற்றும் ஏற்றுமதியைக் கையாளும் எச்எம்டி இண்டர்நேஷனல் களமச்சேரி உட்பட ஆறு உற்பத்தி பிரிவுகளின் சீரமைப்புக்கான விரிவான அறிக்கையை இந்த ஆலோசனை நிறுவனம் வழங்க உள்ளது. எச்எம்டி-யின் சரிவு இரண்டாம் ஐமுகூ மற்றும் தேஜகூ அரசாங்க கொள்கைகளின் ஒரு பகுதியாகும். 2023 ஆம் ஆண்டில், நிறுவனத்தை புதுப்பிக்க ஒரு நிபுணர் குழுவை நியமிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது. திமுக எம்பி திருச்சி சிவா தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையாகும் இது.
எச்எம்டி நிர்வாக மட்டத்திலிருந்து உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்பத்தில் சரியான நேரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான ஆலோச னை சமர்ப்பிக்க வேண்டும். நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் உள்நாட்டு-வெளிநாட்டு சந்தைகளின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து, மறுமலர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும். பொறுப்பு களைக் குறைக்கும் திறன் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கும். இதற்கான டெண்டர்களை ஆன்லைனில் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இயந்திர சாதனங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளின் உலகத் தரம் வாய்ந்த பிரமாண்டமான எச்எம்டி இன் வீழ்ச்சி, முதலாவது ஐமுகூ அரசாங்கத்தின் கடைசி நாட்களில் தொடங்கியது. இறக்குமதி கொள்கைகளின் ஒரு பகுதியாக உற்பத்தி அலகுகளை இழந்தது. யூனிட்களை விற்பதற்கும் குத்தகைக்கு விடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2014இல், தேஜகூ ஆட்சிக்கு வந்த பின், ஹரியானாவில் டிராக்டர் தயாரிப்பு பிரிவும், ஐதரா பாத்தில் உள்ள கடிகாரம் மற்றும் பேரிங் உற்பத்தி பிரிவும் மூடப்பட்டன. தற்போது களமசேரி யூனிட்டைத் தவிர அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. 32,000 பணியாளர்கள் இருந்த இடத்தில், தற்போது 750 பேர் மட்டுமே உள்ளனர். களமசேரி யில் 3,500 ஊழியர்கள் 126 ஆகக் குறைக்கப்பட்டனர். 2010 இல் தொடங்கிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, 2014 இல் நிறுவனத்திற்கு 70 கோடி ரூபாய் தொகுப்பு அறிவிக்கப் பட்டது, ஆனால் நலிவிலிருந்து மீட்க முடியவில்லை. 1997 ஒப்பந்தப்படியே இப்போதும் சம்பளம் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற சுமார் 500 ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை.