tamilnadu

img

மினி கிளினிக்குகளுக்கு மருத்துவர், செவிலியர், உதவியாளர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்திடுக.... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்...

சென்னை:
தமிழகத்தில் தற்போது துவக்கப்படும் மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ, செவிலியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடுமாநிலக்குழு கூட்டம் சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் ‘’மினிகிளினிக்குகளை’’ ஏற்கனவே மருத்துவ வசதி இல்லாத இடங்களில் புதிய கட்டமைப்பை உருவாக்கி ஏற்படுத்த வேண்டும். அதில் பணிபுரியதேவையான மருத்துவர், செவிலியர், உதவியாளர் ஆகியோரை புதியதாக தேர்வு செய்து நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவேண்டும். மாறாக, ஏற்கனவே பற்றாக்குறை உள்ள மருத்துவ மனைகளிலிருந்து ‘’மாற்றுப்பணி’’ அடிப்படையில் பணியமர்த்துவது உரிய பலனைத்தராது என்பதுடன், ‘’தேர்தலுக்கான அரசியல்’’ விளையாட்டாகவே பார்க்கப்படும்.

எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடுக!

தமிழக அரசு, மருத்துவ பணிகள் தேர்வாணையம் (Medical Recuitment Board) மூலம் கடந்த2015ஆம் ஆண்டு 7243 செவிலியர்களையும், அதன்தொடர்ச்சியாக இன்றுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களையும் மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.7,700  ஊதியத்தில் செவிலியராக பணியமர்த்தியது.பணியில் சேர்ந்த இரண்டு வருடத்தில் காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்யப்படும் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தும், ஆறு வருடங்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ளோர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த செவிலியர்களாகவே இன்று வரைபணியாற்றி வருகின்றனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அரசு மருத்துமனையின் அனைத்து பிரிவுகளிலும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.“தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக, கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணி நிரந்தரம் செய்திடவலியுறுத்தி, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டசெவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாககட்டாயத்தின் பேரில் செவிலியர்களின் ஊதியம்ரூபாய் 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

கடந்த ஆறு வருடமாக  அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. காலமுறை ஊதியமும் வழங்கப்படவில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் உயர்த்தப்பட்ட ஊதியம் உட்பட ரூ. 14 ஆயிரம் மட்டுமேபெற்று பணியாற்றும் நிலை உள்ளது. இதுமருத்துவ பணியில் சேவை புரியும் செவிலியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.எனவே, இவர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம்வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;