பகத்சிங் நகரில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்: மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்
திருவள்ளூர், மே 18- இருளர் இன மக்கள் வசிக்கும் பகத்சிங் நகரில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகத்சிங் நகரில், இருளர் இனததை சேர்ந்தவர்கள் 60 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தின் விளைவாக 52 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக பட்டா வழங்கப்பட்டது. விடுபட்ட 8 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என சிபிஎம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடை பெற்றது. இதன் விளைவாக விடுபட்ட 8 குடும்பங்களுக்கு மே 14 அன்று பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை வழங்க வேண்டும், நடமாடும் ரேசன் கடை அமைக்க வேண்டும், 3 கி.மீ. தூரத்திற்கு அப்பால் பள்ளி உள்ளதால், இருளர் இன மக்கள் வசிக்கும் பகத்சிங் நகரில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, ஒன்றிய நிர்வாகிகள் வி.அந்தோணி, கோபி, சின்னப்பையன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.