சென்னை, ஜூலை 9- வட மாநிலங்களுக்கு செல்லும் அதி விரைவு, விரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடசென்னை மக்களவை உறுப்பி னர் டாக்டர் கலாநிதி வீராசாமியை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் சந்தித்து வலி யுறுத்தினார்.
அப்போது அவரிடம் அளித்த மனுவில், விம்கோ ரயில் நிலையத்தில் அதிவிரைவு, விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது மெட்ரோ ரயில் நிலையம், திருவொற்றியூர் பேருந்து நிறுத்தம் விம்கோ நகர் ரயில் நிலை யம் அருகில் இருப்பதால் வட மாநிலங் களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றால், வண்ணாரப்பேட்டை, தண்டை யார்பேட்டை ராயபுரம், ஆர்.கே.நகர், திரு வொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம், மணலி புதுநகர், அத்திப்பட்டு, பட்டமந்திரி, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் வாழும் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடை வார்கள்.
எனவே வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மக்களவை உறுப்பினர் ரயில்வே துறையிடம் வலியுறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார். மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், பகுதி தலைவர் அலமேலு, சிபிஎம் பகுதி குழு உறுப்பினர்கள் கே.வெங்கடய்யா, கிரிஜா, பொது நலச்சங்க செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
ஆணையர் இடமாற்றம்
சென்னை,ஜூலை 9- தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளார். ஐபிஎஸ் அதிகாரி அபின்தினேஷ் மோதக் புதிய ஆணையராக நிய மிக்கப்பட்டுள்ளார்.