tamilnadu

img

அவர் ஓர் இலக்கிய அமுதசுரபி n தஞ்சை கே.அபிமன்னன்

அயராது உன் இயக்கப் பணியிடையில்
உன்சிந்தனை தூரிகைக்கு இரையாகி
கவிதையும் கதையும் நாவலும்
எழுதமுடிந்தது என்று 
வியந்து போன கூட்டம் அன்று

படைப்பாளிகளை பிள்ளையைப் போல்
உச்சிமுகர்ந்து கொஞ்சும் 
பாங்கும் பக்குவமும் 
உமக்கே உரித்தானது

இன்றைய நாடக தொடர்களில் 
கதாபாத்திரங்கள் குடும்ப உறவுகளை
சீரழிக்கும் சீரியல்களாக 
ஓடுது தொலைக்காட்சியில் - மாறாக

செவ்வாழை 
ஏரோட்டி மகன்
புதிய தலைமுறை நாடகக் கருத்து
அன்று இன்றும் என்றும்
பாட்டாளி வாழ்க்கைக்கு
வழிகாட்டும் கதா பாத்திரங்கள்

தடைவிதிக்கப்பட்ட காலத்தில் 
பிரிட்டிஷ் காவல்துறை கண்ணில்
மண்ணை தூவிவிட்டு 
மக்களிடம் மார்க்சியத்தை
கொண்டு செல்ல எண்ணற்ற
மாறுவேடம்  

வங்கக்கடல் கரை ஓரம்
சதுப்பு நிலப்பகுதியில் 
கண்டெடுத்த முத்து
கே.எம் என்ற எங்கள் சொத்து

பேராவூரணி எனும் பேரூரின்
குக்கிராமத்தில் பூத்த மலரல்லவா நீ
தேன்சுவை நிறைந்த மகரந்தத்தை
ருசிபார்க்க பசியாற 
நாளை தேவைக்கு
கொள்ளை கொண்டுபோக
 
ஆயிரமாயிரமாய் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சிகளாய்
ரீங்காரமிடும் வண்டுகளால்
உன் இலக்கியத்தையும் 
இலக்கணத்தையும் கவிதைநடை
கதாபாத்திரத்தையும் கற்றுக்கொள்ள
வட்டமிடும் எண்ணிலடங்கா 
இளஞர் கூட்டம்

உச்சி மலை முகடுகளை 
கருக்கல் மேகக்கூட்டங்கள்
முட்டிமோதி போகும் நிலைகண்டு
ஊரணிகரையோரம் ஒருவராய் 
உலாவும் போதும்
ஊர்கூடி தேர்இழுக்கும் 
காட்சிகளை காணும்போதும்தான்

கவிதையும் கதையும் எழுத
மூளை முளைக்கும் இன்றைய கவிஞனுக்கும்
எழுத்தாளனுக்கும் – மாறாக 


பார்ப்பவர் மலைக்க 
கேட்பவர் அதிர்ந்து போக
இரட்டை சகோதரராய் பாரினில்
சுந்தரய்யாவும் – முத்தையாவும்

அவர் ஒரு அறிவு ஊற்று
அவர் ஓர் இலக்கிய அமுத சுரபி
அள்ள அள்ளக் குறையாத 
இலக்கிய ஓடையில்
அறிவு ஊற்றில் இலக்கியத்தையும்
இலக்கணத்தையும் பயின்றவர்கள் 
வீறிய விதைகளானார்கள் 
விளைநிலத்தில்

படிப்பவர்கள் கையில் பல பல
நாவல்கள் தவழும்
அவற்றில் கற்பனையும் 
சிலநிஜங்களும் தொக்கி நிற்கும்

மனதை உறையவைக்கும் 
நெஞ்சைப் பிசையச் செய்யும்
பாமரனை, பகுத்தறிவாளராக்கும்
நீ எழுதிய உன்னதமான 
உலைக்களம் 
விளைநிலம் நாவல்கள்

பாரினில் வாழும் 
பாட்டாளியின் வாழ்வில்
வெளிச்சத்தை ஊட்டும்!

இன்று (ஜுன் 10) தோழர் கே.முத்தையா நினைவு நாள்