tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செந்தில் பாலாஜி ராஜினாமா : ஆளுநர் ஏற்பு 
சென்னை, பிப்.13- சட்டவிரோத பண பரி வர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி யை, அமலாக்கத்துறை அதி காரிகள் கைது செய்தனர். எனினும் செந்தில் பாலாஜி அமைச்சராக  நீடித்து வந்தார். இந்நிலையில், 8 மாதங் களாக சிறையில் இருக்கும் அவர், திங்களன்று இரவு  தனது அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்தார். இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பினார். அந்தக் கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் அனுப்பிவைத்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி யின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் விவகாரம்: ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு பதில்?
சென்னை, பிப்.13- ராஜீவ் காந்தி வழக்கில், ஆயுள் தண்டனை அனு பவித்து விடுதலையான சாந்தன், இலங்கை திரும்பு வதற்கான தற்காலிக பயண ஆவணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், எனினும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப் படையில், சாந்தனை இலங் கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப் பிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.